• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் வரத்து அதிகரிப்பு

June 28, 2022 தண்டோரா குழு

சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் நேற்று மட்டும் 23 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகரில் உள்ள 32 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநில எல்லைக்குள் அமைந்து உள்ள இந்த அணையானது 50 அடி உயரம் கொண்டது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் பெய்ய தொடங்கும்.

இதனால் அணையின் நீர்மட்டம் உயரும். ஆனால் நடப்பாண்டில் ஜூன் மாதம் தொடங்கி 3 வாரங்கள் முடிந்த நிலையில் பருவமழை தொடங்காமல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது சிறுவாணி அணையில் 14.5 அடிக்கு தண்ணீர் உள்ளது. பருவமழை தொடர்ந்து பெய்தால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் படிக்க