• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் உயிரிழப்பு

June 26, 2022 தண்டோரா குழு

கோவை காளியாபுரம் சின்னைய கவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்(17) மற்றும் காகா.சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார்(17) ஆகிய இருவரும் டவுன்ஹால் பகுதியில் உள்ள c.s.i. மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களுடன் சேர்ந்து நண்பர்கள் 3 பேரும் காளியாபுரம் பகுதியில் உள்ள கல்லு குழியில குளிக்க சென்றுள்ளனர்.அப்போது தண்ணீரில் இருவர் மட்டும் சிக்கிக்கொண்டுள்ளனர். உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சஞ்சய் மற்றும் சஞ்சய் குமார் தண்ணீரில் தேடி வந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

நீண்ட நேரம் தேடுதலுக்கு பின் சடலமாக கிடைக்கப்பட்ட இருவரின் உடலும் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் மாணவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க