• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படுகிறதா? என மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

June 24, 2022 தண்டோரா குழு

கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக வீதியில் பொதுமக்களிடம் தண்ணீர் விநியோகம், தண்ணீரின் அழுத்தம் மற்றும் தரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கேட்டறிந்து ஆய்வில் ஈடுபட்டார்.

மேலும் அப்பகுதியிலுள்ள மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவீட்டார்.

பின்னர் வார்டு எண் 100க்குட்பட்ட பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் உள்ளதா? தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து உக்கடம் கழிவு நீர் பண்ணையில் அமைந்துள்ள கழிவு நீர் கத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்ட அவர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.பின்னர் கழிவுநீர் கத்திகரிப்பு நிலையத்தினை தூய்மையாக பாரமரித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து உக்கடம் புல்லுக்காடு பகுதியில் 4.6 மெகாவாட் திறன் மின் உற்பத்தி செய்யும் சோலார் உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க