• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு மேயர் வாழ்த்து

June 24, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.இதில் படித்த 553 மாணவர்களும்,1,081 மாணவிகள் என மொத்தம் 1,634 பேர் 12ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 470 மாணவர்களும், 1,036 மாணவிகள் என மொத்தம் 1,506 பேரும் தேர்ச்சி பெற்றனர். இது 92.17 சதவீதமாகும்.

அதே போல் கோவை மாநகராட்சியின் கீழ் 28 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 731 மாணவர்களும், 1,101 மாணவிகளும் என மொத்தம் 1,832 பேர் எழுதினர். இதில் 568 மாணவர்கள், 1,040 மாணவிகள் என 1,608 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.77 தேர்ச்சி சதவீதமாகும்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 4 பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணைமேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் ஷர்மிளா, கல்விக்குழு தலைவர் மாலதி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க