• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிங்காநல்லூர் உழவர்சந்தையில் பழுதடைந்த மேற்கூரையை புனரமைக்க உத்தரவு

June 21, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 53 மற்றும் 60 வது வார்டுக்குட்பட்ட வரதராஜபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிங்காநல்லூர் உழவர்சந்தையில் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், போதிய

சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், உழவர்சந்தையில் பழுதடைந்த மேற்கூரையை விரைவில் புனரமைத்து வியாபாரிகளுக்கு வழங்க வேளாண்மைத்துறை பொறியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார். பின்னர், வரதராஜபுரம் மற்றும் சிங்காநல்லூர் கால்வாயை தூர்வாரி கழிவுகளை அகற்றிட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி கமிஷனர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க