• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அந்தோணியார் ஆலய ஆடம்பர 15தேர்களின் பவனி விழா ! மத வேறுபாடுகளின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

June 20, 2022 தண்டோரா குழு

கோவையில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர் பவனி விழாவில் 15தேர்கள் வண்ண விளக்குகளுடன் திருவீதி உலா வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் கடந்த 2 வருடமாக கொரோனா ஊரடங்கால் தேர் திருவிழா நடைபெறவில்லை.இந்த நிலையில் இந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றி தேர் திருவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நாட்கள் தொடங்கியது. தொடர்ந்து இன்றோடு ஏழு நாட்களும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து ஆடம்பர தேர் திருவிழா பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியில் அந்தோணியார் தேர்,சூசையப்பர் தேர், சகாய மாதா தேர், பனிமய மாதா தேர், அன்னை தெரசா தேர்,
மிக்கேல் அதிதூதர் தேர்,இருதய ஆண்டவர் தேர்,பூண்டி மாதா தேர்,செபமாலை மாதா தேர்,
பெரியநாயகி மாதா தேர், வேளாங்கண்ணி மாதா தேர்,குழந்தை இயேசு தேர்,செபஸ்தியார் தேர், புனித தெரசா தேர்,காணிக்கை மாதா தேர் என 15 தேர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பவனி ஆனது புனித அந்தோணியார் தேவாலய நுழைவாயிலில் இருந்து தொடங்கி ரெட் ஃபீல்ட்ஸ் ரோடு வழியாக வந்து, ராமநாதபுரம் காவல் நிலையம் பின்புறம் சென்று மீண்டும் அந்தோணியார் கோயிலை அடைந்தது. இந்த பவானியில் மத வேறுபாடுகளின்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க