• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவராம் நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு

June 20, 2022 தண்டோரா குழு

கோவை சுங்கம் பகுதி சிவராம் நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் தொட்டி கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவராம் நகர் குடியிருப்போர் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவராம் நகர் மாநகராட்சி நினைவு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட. அவர்கள் ” சட்டத்திற்குப் புறம்பாக தண்ணீர் தொட்டி கட்டாதே, இயற்கை வளங்களை அழிக்காதே, மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்து, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவை அழிக்காதே” போன்ற கண்டன பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க