இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் கூறியதாவது:
இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த அளவு 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும். வடகாற்று தெற்கு நோக்கி வீசுவதால் பனிபொழிவு அதிகமாகவே காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்