• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2 நாட்களில் 21 இருசக்கர வாகனங்கள் திருட்டு

June 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக புகார் வந்ததுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் 9 இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்ததந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.கோவை பெரியகடை வீதி, காட்டூர், சாய்பாபா காலனி, ராமநாதபுரம், பீளமேடு உள்பட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போய்யுள்ளது

இந்த நிலையில் பீளமேடு வி.கே. ரோடு பகுதிைய சேர்ந்த ஸ்ரீகாந்த் (45) என்பவர் தனது மொபட் திருட்டு போது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.சமூக வலைதளங்களில்
அதில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை லாவகரமாக திருடி மெதுவாக சாலையில் தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மாநகரில் நேற்று முன்தினம் 12 இருசக்கர வாகனங்கள் திருட்டு போன நிலையில் நேற்று மீண்டும் 9 வாகனங்கள் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் 2 நாட்களில் 21 புகார்கள் பதிவாகி உள்ளன.

மேலும் படிக்க