• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

June 15, 2022 தண்டோரா குழு

கோவை க.க சாவடி திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (36). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரதிபா (34).. தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு சதிஷ்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.இதை மனைவி பிரதிபா கண்டித்துள்ளார்.இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் மறுநாள் காலை பிரதிபா கோபித்துக் கொண்டு தர்மபுரியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் விரக்தியில் இருந்த சதீஷ்குமார் நேற்று மதுக்கரை-திருமலையாம்பாளையம் ரோட்டில் உள்ள தோட்டத்தில் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் முகேஷ் (20). சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க