• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 50வது உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்

June 8, 2022

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பாக 50வது உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாப்பட்டது. சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார். இதையடுத்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் இளநிலை, முதுநிலை, முனைவர் மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை மாணவர்கள் பேடையில் அரங்கேற்றினர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதல்களும் வழங்கப்பட்டது. மேலும், ஐடிசி நிறுவனத்தின் கழிவு மேலான்மை திட்டமான ‘வாவ்’ மறுசுழற்ச்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இப்பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையின் தலைவர் மகேஸ்வரி, இயற்க்கை வள மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் தேவகி, பீமா ஜுவல்லர்ஸ் நிர்வாகிகள் உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க