• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலிதீன் கவர்கள் ஒழிப்பு என்ற பெயரில் சிறு வணிகர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு கண்டனம்

May 31, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட சுதேசி வணிகர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

வணிகர் சங்கத் தலைவர் மணிகண்டன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கோவை மாவட்டத்தில் பாலிதீன் அவர்கள் ஒழிப்பு என்ற பெயரில் அரசு அலுவலர்கள் சோதனை நடத்துவதில் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், முதலில் பாலீத்தீன் கவர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

மேலும் பாலிதீன் பொருட்களை மாநில எல்லைகளிலேயே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாலிதீன் உற்பத்தியை தடுக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க