• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மாநகராட்சி கமிஷனர் தகவல்

May 20, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதூர் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்கத்தில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வீடற்ற நாய்களின் எண்ணிக்கையை தனியார் நிறுவனத்தின் மூலம் 20 முதல் 25 தன்னார்வலர்கள் உதவியுடன் தகுந்த நெறிமுறைகளை பின்பற்றி புள்ளி விவரங்களுடன் கணக்கெடுக்கப்பட உள்ளது.

கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பு ஊசி மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க