• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிக்கு வெண்கல பதக்கம்

May 19, 2022 தண்டோரா குழு

ஜெர்மனியில் கடந்த மே 18ம் தேதியன்று நடைபெற்ற ISSF ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், 25 M ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஓபன் போட்டியில், PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவி நிவேதிதா V நாயர் – III BBA
வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு வீராங்கனை இவர்தான். கத்தாரில் ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் பெரு தென் அமெரிக்காவில் உலக சாம்பியன்ஷிப்பைத் தொடர்ந்து,நிவேதிதா பெற்ற மூன்றாவது சர்வதேச பதக்கம் இதுவாகும்.

இதையடுத்து,கல்லூரித் தலைவர் முனைவர் நந்தினி ரங்கசாமி,கல்லூரி தாளாளர் முனைவர் யசோதா தேவி,கல்லூரி முதல்வர் முனைவர் நிர்மலா மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெயசித்ரா ஆகியோர் நிவேதிதா மற்றும் அவரது பெற்றோர்களை பாராட்டினார்கள்.

நிவேதிதாவின் பயிற்றுனர் அவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க