• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட பசுமை சாம்பியன் விருது

May 12, 2022 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,2021-22ம் ஆண்டிற்கான இந்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்விக் குழுவினால், ஸ்வச்தா செயல் திட்டத்தை செயல்படுத்தி, நிலையான மற்றும் பசுமையான நடைமுறைகளை பயனுள்ள வகையில் மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க முன் முயற்சிகளை மேற்கொண்டதற்காக மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது.

ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மை, பல்லுயிர், திறமையான கழிவு உற்பத்தி மற்றும் வளாகத்தில் அகற்றும் நடைமுறைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி கவுன்சில் தலைவர் டாக்டர் டபிள்யூ ஜி பிரசன்ன குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை வழங்கினர்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியன் செயலாளர் கண்ணையன் மற்றும் முதல்வர் பிருந்தா ஆகியோர் விருதினை பெற்றனர். இதில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க