• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மேயர் ஆய்வு

May 11, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 55க்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, பாரதி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்த ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணியினை விரைவாகவும், தரமானதாகவும், செய்துமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,உதவி கமிஷனர் மாரிச்செல்வி, கவுன்சிலர்கள் தர்மராஜ்,கிருஷ்ணமூர்த்தி, பாக்கியம்,உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன்,உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி,உதவி பொறியாளர் எழில் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க