• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணபதிபுதூரில் சுகாதார மையம் கட்டுமான பணிகளை மேயர் ஆய்வு

May 10, 2022 தண்டோரா குழு

மாநகராட்சி வடக்கு மண்டலம் 29வது வார்டுக்குட்பட்ட கணபதிபுதூர்‌ பகுதியில்‌ சுகாதார மையம்‌ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கணபதி புதூர்‌ பகுதியில்‌ நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி ஆகியோர்‌ துவக்கி வைத்த சுகாதார மையம்‌ கட்டும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும்‌, தரமானதாகவும்‌, செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவரப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, மண்டல குழு தலைவர்‌ வே.கதிர்வேல்‌, 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில் பாஸ்கர்‌ ஆகியோர்‌ உடன் இருந்தனர்.

மேலும் படிக்க