• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்க் பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் துறை சங்கம் துவக்க விழா

May 7, 2022 தண்டோரா குழு

கணியூர் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில் முனைவர். ரங்கசாமி, முன்னாள் இயக்குனர், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், கோவை சிறப்பு விருதினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
துவக்க உரையில் பேசிய இக்கலூரியின் முதல்வர் முனைவர் மோகன்குமார் “நவீன காலத்தில் வேளாண் துறையின் வளர்ச்சி” பற்றி பேசினார்.பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தனது தலைமை உரையில் “சுற்றுப்புற சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு” பற்றி பேசினார்.

சிறப்பு விருந்தினர் முனைவர் ரங்கசாமி “துரிய பண்ணையம் மற்றும் நீர் பாசன முறை” பற்றி சிறப்புரையாற்றினார்.இதனை தொடர்ந்து ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் ஸ்ரீதர் “இயந்திரவியல் மற்றும் நவீன செயலிகள்” என்ற தலைப்பிலும், RVS பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் ராஜ்குமார் “உணவு பதப்படுத்தும் முறை மற்றும் ஊட்டச்சத்தின் பங்கு மற்றும் அதன் தேவை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர். பாலசுப்ரமணியன் “விவசாயத் துறையில் தற்போது இருக்கும் சிக்கல்களையும் அவற்றை களைய நாம் நவீன சாதனங்களை பயன்படுத்தும் முறை” பற்றியும் விளக்க உரை ஆற்றினார்.

மேலும் படிக்க