• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு – மேயர் நேரில் ஆய்வு

May 6, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காமராஜர் சாலையில் மதுக்கரைக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இந்த குழாய் உடைப்பை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் சரிசெய்து வருகின்றனர். இப்பணியை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர், உடைப்பை விரைந்து சரிசெய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல உதவி கமிஷனர் மாரிச்செல்வி, 54வது வார்டு கவுன்சிலர் பாக்கியம்,உதவி செயற்பொறியாளர், உதவி நகரமைப்பு அலுவலர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க