• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனாவால் மரணம் அடைந்த கிராம உதவியாளர் வாரிசுதாரர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கல்

May 3, 2022 தண்டோரா குழு

கொரோனாவால் மரணம் அடைந்த
கிராம உதவியாளர் வாரிசுதாரர்களுக்கு ரூ.25 லட்சம் ஆட்சியர் வழங்கினார்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வடவேடம்பட்டி கிராம உதவியாளர் ரங்கநாதன் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்ததையொட்டி, முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை அவரின் வாரிசுதாரர்களுக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

சூலூர் வட்டம் வடவேடம்பட்டி கிராம உதவியாளர் ரங்கநாதன் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார்.இதனையொட்டி முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை அவரின் வாரிசுதாரர்களான மனைவி,மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு கலெக்டர் சமீரன் வழங்கினார்.

மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2021-22ம் நிதியாண்டிற்கு திருநங்கைகள் சுயத்தொழில் துவங்குவதற்கு 6 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

மேலும் படிக்க