• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் 9821 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

April 30, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக வார்டு ஒன்றிற்கு 3 பூத்கள் மற்றும் நிலையம் ஒன்றிற்கு 1 மொபைல் பூத் என்ற அடிப்படையில் மொத்தம் 325 பூத்களில் தடுப்பூசி போடப்பட்டது.

இதில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதே போல் மேற்கு மண்டலம் ஆர்.கே.பாய் நகர் நல மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த முகாம்களில் ஒரே நாளில் முதல் தவனை தடுப்பூசி 622 பேர் செலுத்தி கொண்டனர். இரண்டாம் தவனை தடுப்பூசி 3541 பேர் செலுத்தி கொண்டனர், பூஸ்டோர் டோஸ் 2917 பேர் செலுத்தி கொண்டனர்.15-18 வயதுடையவர்கள் 185 பேர் செலுத்தி கொண்டனர். 12-14 வயதுடையவர்கள் 2556 பேர் செலுத்தி கொண்டனர். ஆக மொத்தம் மாநகராட்சி பகுதியில் 9821 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேலும் படிக்க