• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்

April 27, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நேரடியாக நடத்தப்பட உள்ளது.

இதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்ட அரங்கில் அன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும். கோவை மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தக்க தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க