• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய பாஜக வினர்

April 19, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி முல்லை நகரில் உள்ள அங்கன்வாடியில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் குறித்து (குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான சத்துணவு திட்டம்) விளக்கமளிக்கப்பட்டது.

பாஜக இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம்,மாநில செயலாளர் மலர்கொடி,மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு அத்திட்டம் குறித்தும் பிரதமரின் திட்டங்கள் குறித்தும் கர்ப்பிணி பெண்களிடம் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் 5 கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னதாக பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி தனது சொந்த செலவில் கட்டிய இரண்டு கழிவறைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார். நிகழ்விற்கு முன்னதாக பிரீத்தி லட்சுமி முருகானந்தம் ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தபட்டது.

இந்நிகழ்வில் பாஜக அப்பகுதி பாஜக வினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க