• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடையால் பெண்கள் குழந்தைக்ளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்

April 18, 2022 தண்டோரா குழு

கோவையில் பொது இடத்தில் உள்ளா டாஸ்மாக் கடையால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் என்று மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சுந்தராபுரம் சாரதாமில் சாலையில் மதுபான கடை எண் 1756 செயல்பட்டு வருகிறது.

இந்த மதுக்கடைக்கு எதிரில் திரையரங்கம் உள்ளது. ஏற்கனவே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த இடத்தில் மது கடையும் இருப்பது மிகவும் ஆபத்தாக உள்ளது.இந்த பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் இந்த மதுக்கடையை அகற்றக்கோரி திமுக.,வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.ஆனால் தற்போது அமைதி காக்கின்றனர்.எனவே இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க