• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்கேட்டிங் செய்து கொண்டு அப்துல் கலாம் ஓவியம் வரைந்து உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள்

April 15, 2022 தண்டோரா குழு

எஸ்.கே ஸ்பீட் ஸ்கேட்டிங் மற்றும் அசிட் வேல்ட் ரெக்கார்டு சார்பில் ஸ்கேட்டிங் மாணவர்கள் உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் மைல்கல் அருகே உள்ள ப்பீள் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியினை ப்பீள் பள்ளி இயக்குனர்கள் குமரகுரு, சிவப்பிரகாசம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். எஸ்.கே ஸ்பீடு ஸ்கேட்டிங் மாணவரும்,சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி நாலாம் வகுப்பு மாணவருமான சுதன், ஸ்கேட்டிங் செய்து கொண்டே அப்துல் கலாம் ஓவியத்தை 2 நிமிடங்கள் 49 வினாடிகளில் வரைந்து உலக சாதனை செய்தார்.

ப்பீள் பள்ளி 7ம் வகுப்பு மாணவன் மதுமுகிலன் ஸ்கேட்டிங் செய்துகொண்டு 4 நிமிடங்கள் 38 வினாடிகளில் 10 கியூப் களை சரி செய்து, உலக சாதனை நிகழ்த்தினார்.இதேபோல் மல்லைய்யைன் பள்ளி 4ம் வகுப்பு மாணவி மகிதாஸ்ரீ 34 வினாடிகளில் 27 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து உலக சாதனை செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்ப்பட்டது.

நிகழ்ச்சியில் எஸ்.கே ஸ்பீடு ஸ்கேட்டிங் நிறுவனர் சசிக்குமார், செயலாளர் சதீஷ், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க