• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வஉசி உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் புதிய உயிரியல் பூங்கா அமைக்க திட்டம்

April 12, 2022 தண்டோரா குழு

கோவை காந்திரம் நேரு விளையாட்டு அரங்கு அருகில் உள்ள மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் பொழுது போக்கு பூங்காவாக வ.உ.சி பூங்கா இருந்தது. இந்நிலையில் கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது. இதனால் பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனால் கோவை மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோவையில் புதிய அம்சங்களுடன் கூடிய புதிய உயிரியல் பூங்கா ஒன்று கட்டமைக்கப்படவுள்ளது. கோவை நஞ்சப்பா சாலையில் சிறை மைதானம் பகுதியில் மாநகராட்சி இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த நவீன உயிரியல் பூங்கா அமையவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘இந்த புதிய உயிரியல் பூங்கா கட்டமைப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் முடிவடையும். அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’என்றார்.

மேலும் படிக்க