• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம்

April 11, 2022 தண்டோரா குழு

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள துடியலூர்,வடவள்ளி உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளைநிலங்களிலும்,மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன.

அப்போது,அவை மின்கம்பிகளில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் நேற்று கணபதி மணியகாரன் பாளையம் ஸ்டேட் பாங்கி எதிர்ப்புறம் உள்ள சாலை,இன்று காலை துடியலூர் ரேஷன் கடையின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் சிக்கி தேசிய பறவையான இரு மயில்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன.

தொடர்ந்து தேசிய பறவையான மயில்கள் மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் படிக்க