• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நவக்கரையில் ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழந்த சம்பவம்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

April 11, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் தமிழ்நாடு-கேரள எல்லையான நவக்கரை பகுதியில் ரயில் பாதையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மங்களூர்-சென்னை விரைவு ரயில் சென்றது போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தது.

யானைகள் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன்,சதீஷ்குமார்இளந்திரையன் ஆகியோர் தலைமையில் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இன்ஜினில் தண்டவாளத்தில் பயணித்த படி வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நவக்கரை பகுதியில் சிறிது நேரம் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள வாளையார் ரயில் நிலையத்திலும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் தொலைக்காட்சி மூலம் யானை வழிப்பாதை மற்றும் ரயில் பாதைகள் ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழக கேரள வனத்துறை அதிகாரிகள், மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க