• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்த இளைஞர் உட்பட நான்கு பேர் கைது

April 10, 2022 தண்டோரா குழு

15 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்திலும்,குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் சிறுமியின் பெற்றோர்,இளைஞரின் தாய் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 15 வயது பழங்குடியின சிறுமி.சிறுமியின் உறவினரான காரமடை கிட்டாம்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வராஜ்(25) என்பவர் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த செல்வராஜின் தாய் சரஸ்வதி,சிறுமியின் பெற்றோர்களான கருப்பசாமி,சுமித்ரா உள்ளிட்டோர் 15 வயது சிறுமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் காரமடை மொக்கை நகரில் உள்ள விநாயகர் கோவிலில் ரகசிய திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இச்சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஊரக நல அலுவலர் தனபாக்கியம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என தெரிய வந்ததை அடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழும்,குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் சிறுமியின் பெற்றோர் கருப்பசாமி,சுமித்ரா மற்றும் செல்வராஜின் தாய் சரஸ்வதி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காரமடை காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.15 வயது பழங்குடியின சிறுமிக்கு நேர்ந்த சோகம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க