• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தது 5 சதவீதம் பணி ! தொழிலாளர் உதவி ஆணையர் வலியுறுத்தல்

April 9, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தது 5 சதவீதம் பணியிடங்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை தொழிலாளர் உதவி ஆணையர்( அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

கோவை மாவட்டத்தில் 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும்,மாற்றுத்திறனாளிகளுக்கு சமவேலை வாய்ப்பு கொள்கைகளை, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2015 பிரிவு 21 இன் படி நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கான பணியிடங்களைக் கண்டறிந்து குறைந்தது 5 சதவீதம் பணி வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

20 நபர்களுக்கு மேல் பணியாளர்களைப் பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையத்தில் உள்ள கூகுள் சீட் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். உணவு, கடைகள், நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் அதிக மாற்றுத்திறனாளிகளை பணி நியமனம் செய்வதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி, வாகன நிறுத்துமிடம் செய்து தர வேண்டும்.

அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கும் நிறுவனத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க