கொரோனா தொற்று நோய் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக நமக்கு உணர்த்தியுள்ளது. பி எஸ் ஜி செவிலியர் கல்லூரி மாணவ செவிலியர் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சமூக நல செவிலியர் துறை இணைந்து ஏப்ரல் 7, 2022 அன்று உலக சுகாதார தினத்தை “நமது உலகம் நமது ஆரோக்கியம் ” என்ற கருப்பொருளுடன் அனுசரித்தது.
யோகா பயிற்சி , உடல் நலக்கல்வி, குறு நாடகம், விளையாட்டுகள் மற்றும் பள்ளி சுகாதார மேளா போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.யோகா உடலுக்கும் மனதுக்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.இது அமைதியையும் நினைவாற்றலையும் வழங்குகிறது மற்றும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
பீளமேடு பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆலோசகர் ஜலாதரன் பி எஸ் ஜி விளையாட்டு மைதானத்தில் காலை 7 மணிக்கு எளிய யோகாசனங்களை செய்து காண்பித்தார். இதில் சுமார் 400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பி எஸ் ஜி மருத்துவமனை‘பி’ பிரிவு வளாகத்தில் 2ம் ஆண்டு மாணவர்கள் குறு நாடகம், நலக்கல்வி மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பள்ளி ஆரோக்கிய மேளா பி எஸ் ஜி வேடப்பட்டி மேல்நிலை பள்ளியில் 4ம் ஆண்டு மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சுற்றுப்புற சுகாதாரம், நொறுக்கு தீனிகளால் ஏற்படும் தீமைகள் குறித்த பேஷன் ஷோ, உடற்பயிற்சி நடனம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சிகளை ஏற்பாடு செய்தனர்இதன்முலம் சுமார் 150 மாணவர்கள் பயனடைந்தனர்.
ஆரோக்கியமான உலகத்தை நோக்கி நகரும் வகையில் நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விதைகள் வழங்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !
நாடு தழுவிய ஐ கேர் மான்ஸூன் சர்வீஸ் கேம்ப் இசுசு மோட்டார்ஸ் இந்தியா நடத்துகிறது
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு