• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியில் 11ம் தேதி முதல் சாதாரண கூட்டம்

April 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 11ம் தேதி, மாமன்ற முதல் சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி பெற்றது.3 வார்டுகளில் அதிமுகவும், ஒரு இடத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் வெற்றி பெற்றது.கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா ஆணந்தகுமார், துணைமேயராக வெற்றிச்செல்வன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், மண்டலத் தலைவர்கள்,நிதிக்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, புதிய மேயர், துணை மேயர் பொறுப்பேற்ற பிறகு மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகதத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற முதல் சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது. இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க