• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அவினாசி ரோடு மேம்பாலம் ரூ.550 கோடி செலவில் நீலாம்பூர் வரை நீட்டிக்க திட்டம்

April 6, 2022 தண்டோரா குழு

கோவை அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,650 கோடி செலவில் 10.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து ரூ.550 கோடி செலவில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவினாசி ரோடு மேம்பாலத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை அவினாசி ரோடு மேம்பாலப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்பாலத்தில் மொத்தம் 306 தாங்கு தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இதுவரை 263 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹோப்காலேஜ், பன்மால், எஸ்.ஓ.பங்க், பி.எஸ்.ஜி. கல்லூரி சிக்னல், நவஇந்தியா சிக்னல், லட்சுமி மில் சிக்னல், அண்ணா சிலை சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 18 தூண்கள் அமைக்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு சிக்னல் பகுதியிலும் தூண்கள் அமைக்கும்போது ரூ.2 லட்சம் செலவில் சிக்னல் அமைக்கப்பட உள்ளது. தற்போது விமானநிலையம் அருகில் தூண்கள் மீது லாஞ்சர் பொருத்தப்பட்டு மேம்பால பக்கவாட்டு தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேம்பாலத்துக்காக கான்கிரீட் தளங்கள் தென்னம்பாளையம் பகுதியில் தயார் செய்யப்படுகிறது. பின்னர் அவை அங்கிருந்து கொண்டு வரப்பட்டு இயந்திரங்கள் மூலம் பொருத்தப்படுகிறது.

இதனிடையே கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து ரூ.550 கோடி செலவில் மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவினாசி ரோடு மேம்பாலத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது. அரசு அனுமதி அளித்த உடன் நீலாம்பூர் வரை மேம்பாலத்தை நீட்டிக்கும் பணி நடைபெறும். அவினாசி ரோடு மேம்பால பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க