• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு

April 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது.நேற்று நிலைக்குழு தலைவர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் போட்டியின்றி தேர்வு பெற்றவர்களின் விவரம்:

கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ். இவர் 34வது வார்டு கவுன்சிலர் ஆவார். நகரமைப்பு குழுதலைவர் சோமு என்ற சந்தோஷ். 73வது வார்டு கவுன்சிலர் ஆவார்.கணக்குகள் குழு தலைவர் தீபா.இவர் 59வது வார்டு கவுன்சிலர் ஆவார்.பணிகள் குழு தலைவர் சாந்தி. இவர் 63வது வார்டு கவுன்சிலர் ஆவார்.வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா.82வது வார்டு கவுன்சிலர் ஆவார்.

பொதுசுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன். 80வது வார்டு கவுன்சிலர் ஆவார். நியமனக்குழு உறுப்பினருக்கான தேர்தலில் மு.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இவர் 91வது வார்டு கவுன்சிலர் ஆவார்.வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ் வழங்கினார். மேயர் கல்பனா ஆனந்தகுமார் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க