• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவி கோரி விண்ணப்பிக்கலாம்

April 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5,624 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 3,778 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் 1,187 மனுக்கள் இருமுறை பெறப்பட்டது உள்ளிட்ட சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி கடந்த 20-ந் தேதிக்கு முன் ஏற்பட்ட கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 18.5.22-க்குள் தங்களது மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க