• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் கிடங்கில் பயோ மைனிங் திட்டம் 25 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் அழிப்பு

March 29, 2022 தண்டோரா குழு

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் தினமும் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை தரம் பிரிக்கப்படாத சுமார் 25 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இக்கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது.

இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது. பயோ மைனிங் திட்டம் மூலம் தற்போது வெள்ளலூர் குப்பைகிடங்கில் தினமும் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘பயோமைனிங் திட்டத்தின் முதல் கட்டத்தில் 9 லட்சம் கியூபிக் மீட்டர் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் 25 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டுள்ளன. இதில் பிளாஸ்டிக் பொருட்கள், கட்டிட கழிவுகளும் அடங்கும்’’ என்றார்.

மேலும் படிக்க