• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் பயனாளிகள் பயன்பெற ஆட்சியர் வேண்டுகோள்

March 28, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்போர், தொழில் முனைவேர்கள் போன்றவர்களை ஊக்குவித்து அவர்களை மீன் வளர்ப்பில் ஈடுபட செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான பயனாளிகள் பங்களிப்பு திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோரின் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மீனவர்கள், மீன்வளர்ப்பபேர், சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்புக்குழுக்கள், மீன்வளர்ப்பேர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனி நபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பொது பிரிவினருக்கு 40 சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேலும் தொழில் முனைவோர்களுக்கு பொது பிரிவினருக்கு 25 சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவிகள் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், எண் 41 சோமு காம்ப்ளக்ஸ், 1- இஸ்மாயில் தெரு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில், டவுன் ஹால், கோவை – 641 001 என்ற முகவரியில் உள்ள கோயம்புத்தூர் மீன்வளஆய்வாளர் (தொலைபேசி எண்.9655506422) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க