• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில்நிலையத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து

March 28, 2022 தண்டோரா குழு

ரயில்நிலையத்தில் உள்ள உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான உணவகம் அமைந்துள்ளது.இந்த உணவகத்தில் இன்று காலை உணவு தயார் செய்யும் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து காரணமாக கடும் புகை மூட்டம் நிலவியது.

இதை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்தால் ரயில் நிலைய வளாகத்தில் புகை மூட்டம் நிலவியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் புகையை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து மற்றும் புகைமூட்டம் காரணமாக காலை நேரத்தில் கோவை ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க