• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழாயில் பழுது சீரமைத்து குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

March 24, 2022 தண்டோரா குழு

கோவையில் கோடை காலம் முன்னதாகவே தொடங்கி உள்ளது. மார்ச் மாதம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இருப்பினும் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பில்லூர் அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் மற்றும் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் வழங்கும் குழாயில் அடிக்கடி பழுது ஈடுபடுவது வழக்கம். இதனை கோவை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து சீரான இடைவெளியில் குடிநீர் வழங்கி வருகிறது.இந்த நிலையில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 10 க்கு உட்பட்ட சக்தி சாலை சிவனந்தபுரம் பகுதியில் மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக உள்ள பிரதான குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது.

இந்த பழுது மாநகராட்சி பொறியாளர்கள் தீவிரமாக சரி செய்து வருகிறார்கள். இதனிடையே குடிநீர் குழாயில் பழுது சரி செய்யப்படும் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாநகராட்சி பொறியாளர்களுக்கு உடனடியாக இந்த குடிநீர் குழாய்களை சரி செய்து மாலைக்குள் குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் பொறுப்பு ராமசாமி, உதவி செயற் பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க