• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திடீரென காற்றுடன் பெய்த பலத்த மழையால் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் நாசம்

March 24, 2022 தண்டோரா குழு

கோவையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயி வேதனை. அரசு உரிய இழப்பிடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை வெயில் காலம் துவங்கும் முன்னரே தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கோவையில் வெப்ப சலனம் காரணமாக மாலை வேலையில் கோவை மாவட்டத்தில் பல்வேரு பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய தொண்டாமுத்தூர், ஆனைகட்டி போன்ற பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி, சூலூர், செட்டிபாளையம், அன்னூர், துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை போன்ற பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் மழைபெய்தது.

இந்நிலையில், கோவை, போத்தனூர் செட்டிபாளையத்தை அடுத்த மயிலாடும்பாறை பகுதியில் வீசிய பலத்த சூறைகாற்றால் அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்ற விவசாயியின் வாழை தோட்டத்தில் வளர்க்கபட்டு இருந்த 1200 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்ததால் வேதனை அடைந்துள்ளார்.

கேரளாவிற்கு சிப்ஸ் தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்ய 1200 நேந்திர வகை வாழை மரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார். இன்னிலையில் நேற்று வீசிய சூறாவளி காற்றில் வளர்க்கபட்ட வாழை மரங்கள் அனைத்தும் வேறோடும், முறிந்தும் சரிந்துள்ளதாகவும், இதனால் சுமார் ரூ.2.50 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாவும் தெரிவித்தார் மேலும் அரசு பாதிப்புகளை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க