• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துப்புரவு பணி மேற்பார்வையாளர் தற்காலிக பணிநீக்கம் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

March 23, 2022 தண்டோரா குழு

சாக்கடைக்குள் இறங்கி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக துப்புரவு பணி மேற்பார்வையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு 78க்குட்பட்ட பேரூர் பிரதான சாலை ஐயுடிபி காலனி அருகில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் மாணிக்கம், ஒப்பந்த தூய்மை பணியாளர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணமின்றி சாக்கடையை சுத்தம் செய்ய அறிவுறுத்தினார்.இதனையடுத்து சாக்கடைக்குள் இறங்கி தூய்மை பணியாளர்கள் பணி சுத்தம் செய்தனர்.இது தொடர்பாக வீடியோ சமூக வளைதளங்களில் பரவியது.

இதையடுத்து துப்புரவு பணி மேற்பார்வையாளர் மாணிக்கத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க