March 23, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 22 சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வார்டுகள் பிரித்து தரப்பட்டுள்ளன.
மேற்கு மண்டலத்தில் உள்ள 5, 6, 7, 8, 9 ஆகிய வார்டுகளை கவனித்து வந்த சுகாதார ஆய்வாளர் தனபாலன் தற்போது மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 81, 82, 83, 84 ஆகிய வார்டுகளை கவனிக்க நியமிக்கப்பட்டு உள்ளார்.
தனபாலன் கவனித்து வந்த மேற்கு மண்டலத்திற்கு சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.மேற்கு மண்டலத்தில் சந்திரசேகரன் கவனித்து வந்த 10, 11, 12, 22, 23, 24 ஆகிய வார்டுகளை, மத்திய மண்டல சுகாதார ஆய்வாளராக சலேத் கவனிப்பார்.
கோவை மாநகராட்சியில் நிர்வாக நலன் கருதி தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடத்தில் உடனடியாக சேருமாறும், கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.