• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

March 21, 2022 தண்டோரா குழு

கள்ளச்சாராயம் மற்றும் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கங்கை கருங்குயில்,வினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், நாடகம் மூலம் கள்ளச்சாரம் மற்றும் மதுபானத்தின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதே போன்று கதிரவன் கலைக்குழு வினர் எமதர்மன் சித்திரகுப்தன் வேடமணிந்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

மேலும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தீமைகளான “நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மாரடைப்பு, நரம்பு தளர்ச்சி, மலட்டுதன்மை, குடும்ப தகராறு, அவப்பெயர் ஏற்படுதல்” போன்றவை குறித்து விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.இந்த கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் கண்டு களித்தனர்.

மேலும் படிக்க