• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குற்றாலத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சி புகைப்பட கண்காட்சி

March 19, 2022 தண்டோரா குழு

சர்வதேச வனநாளை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சி புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச வனநாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச வனநாளை முன்னிட்டு வனம், பறவைகள்,விலங்குகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,கருத்தரங்குகள் நடைபெறும்.

அந்த வகையில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் சர்வதேச வனநாளை முன்னிட்டு, கோவை சிறுவாணி மலை தொடரில் உள்ள பறவை இனங்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகளின் புகைப்படங்களின், புகைப்பட கண்காட்சி நடத்தி உள்ளது.

கோவை குற்றாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்பட கண்காட்சியை பார்த்து வருகின்றனர். இதன் மூலம் சிறுவாணி மலை தொடரில் மட்டும் இருக்கும் அரிய வகை பறவைகள், வண்ணத்து பூச்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க