• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேயர், துணை மேயர் தலைமையில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இன்று பயிற்சி

March 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது.மேலும், அதிமுக 3 வார்டுகளிலும்,எஸ்.டி.பி.ஐ ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.மாநகராட்சி 100 வார்டுகளில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் கடந்த 2ம் தேதி பதவியேற்றனர்.

மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதே போல் கடந்த 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று மேயராக கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயராக வெற்றி செல்வன் தேர்வு செய்யப்பட்டனர்.

பதவியேற்ற கவுன்சிலர்களில் 3 பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவர்.இதில், 97-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி இளம் வயது கவுன்சிலர் ஆவார்.இவரது வயது 22 ஆகும்.மேலும், வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் சராசரி வயது 47ஆக உள்ளது.இது தவிர, 25 கவுன்சிலர்கள் இளநிலை பட்டப்படிப்பும், 13 கவுன்சிலர்கள் முதுகலை பட்டப்படிப்பும் முடித்துள்ளனர்.

ஒருவர் பி.எச்.டி., முடித்துள்ளார். மேலும், 54 பேர் பிளஸ்2 அல்லது அதற்கும் குறைவான கல்வி தகுதி பெற்றுள்ளனர்.7 கவுன்சிலர்கள் அடிப்படை கல்வி பெறாதவர்கள் ஆவர்.55 பேர் பெண் கவுன்சிலர்களாக உள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றி செல்வன் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான அறிமுக பயிலரங்கம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று நடத்தப்பட உள்ளது.இதில் கவுன்சிலர் பதவிக்கு உள்ள அதிகாரிகள்,செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க