• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு அலுவலர்கள் கட்சி அமைப்புகள் இயக்கங்களுடன் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் ஆய்வு கூட்டம்

March 12, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொன்னாங்கானி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராமு என்பவர் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹல்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசியல் அமைப்புகள், இயக்கங்கள், கட்சியினர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் இயக்கங்களை சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆகியவை அவரிடம் தெரிவிக்கப்பட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க