• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆலோசனை

March 12, 2022 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த சமரசமூம் இன்றி மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வணிகர்கள் தங்களது கடைகளில் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட அளவே மக்களை அனுமதிக்க வேண்டும். குறிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்களும், வணிகர்களும் தவறாது பின்பற்ற வேண்டும். மாநகராட்சி சார்பாக கொரோனா பரவலை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க