• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 665 பள்ளிகளில் ‘‘நான்‌ முதல்வன்‌” நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டுள்ளது

March 12, 2022 தண்டோரா குழு

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள்‌ மற்றும்‌ இளைஞர்கள்‌ படிப்பில்‌ மட்டுமல்லாது வாழ்க்கையிலும்‌ வெற்றியாளராக்கும்‌ வகையில்‌ திறன்‌ மேம்பாட்டு மற்றும்‌ வழிகாட்டுதல்‌ திட்டமாகிய ‘‘நான்‌ முதல்வன்‌” என்கிற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த 1ம் தேதி சென்னையில் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் துவக்கி வைத்த போது கோவை மாவட்டத்தில் உள்ள 83 அரசு உயர் நிலைப்பள்ளிகளிலும், 22 அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகளிலும், 97 தனியார் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளிகளிலும் மாணவ – மாணவியர்களுக்கு‌ நேரலையில்‌ திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

மேலும் 113 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 41 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும்,3 மத்திய அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 306 தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் என மொத்தம் 665 பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவியர்களுக்கு‌ நேரலையில்‌ திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இதனிடையே இளைஞர்களை படிப்பில்‌, அறிவில்‌, சிந்தனையில்‌, ஆற்றலில்‌, திறமையில்‌ மேம்படுத்தி அவர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ”நான் முதல்வன்” திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு கோவை அரசு பள்ளி மாணவ – மாணவியர்கள்‌ நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க