• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையம் குறித்தான ஆலோசனை கூட்டம்

March 9, 2022 தண்டோரா குழு

கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் விமான நிலையம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை விமான நிலைய இயக்குநர், செந்தில்வளவன்,கோவை எம்பி பி.ஆர்.நடராஜன்,கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா, வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், துணை காவல் ஆணையர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், அதை அமல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம், விமான நிலைய பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதால் கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர் என வெளியாகியுள்ள செய்தியை பாராளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் விமான நிலைய இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் கூறினார்.

மேலும் விமான நிலைய இயக்குனர் இந்த கூட்டத்தில் தற்போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயல்பாடுகள் குறித்தும் விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்பட உள்ள வசதிகள் ஆகியவற்றை குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க