• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஷ்ய – உக்ரைன் இடையே சமாதானம் நிலவ வேண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள்

March 8, 2022 தண்டோரா குழு

ரஷ்ய-உக்ரைன் இடையே சமாதானம் நிலவ வேண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் ஐவர் போட்டிகள் நடைபெற்றது,பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கால்பந்தாட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் கேத்தி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ரஷ்ய உக்ரைன் போர் நின்று இரு நாடுகள் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என சீன பாதிரியார் ஆர்தர் பெயரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு,கேரளா,கர்நாடக மற்றும் ஆந்திர உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டிகள் இரவு போட்டியாக நடைபெற்றது.

ஒவ்வொரு போட்டிகளுக்கு முன்பும் ரஷ்ய -உக்ரைன் போர் சமாதனமாக முடிய சிறப்பு பிராத்தனையும் நடைப்பெற்றது.விளக்கொளியில் நடைபெற்ற இந்த போட்டிகளை பற்றி இந்த கல்லூரி தாளாளர் நேச மெர்லின் கூறுகையில், உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரானது நின்று சமாதானம் நிலவ வேண்டி போட்டிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இரவு நேரம் நடைபெறும் இந்த கால்பந்து போட்டியில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளதாகவும்,கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் விளையாடி வருவதாக கூறினார்.இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜோஷ்வா ஞானசேகர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் இறுதி போட்டியில் நீலகிரி பைசன் அணியும் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி அணி மோதிய போட்டியில் நீலகிரி பைசன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன்ஷிப் பட்டதை பெற்றது வெற்றி பெற்ற அணிக்கு பரிசி கோப்பை யும் பரிசு தொகையையும் தாளாளர் நேசமெர்லின் வழங்கினார்.

மேலும் படிக்க